பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் விபத்து – ஐவர் பலி!

Monday, November 28th, 2016

வாத்துவ – பெந்தரமுல்லை பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. காரொன்று புகையிரதத்துடன் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காலியிலிருந்து கொழும்பு – மருதானை நோக்கிச் சென்ற புகையிரதத்தில் காரொன்று மோதியுள்ளது. புகையிரத கடவையின் ஊடாக பயணிக்க முற்பட்ட கரரே புகையிரதத்தில் மோதியுள்ளது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பாணந்துறை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Car-train-crash

Related posts: