மண்டைதீவில் 400 கிலோ கேரள கஞ்சா மீட்பு!
Friday, July 3rd, 2020
யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் சுமார் 400 கிலோ கிராம் கேரளா கஞ்சா தொகையொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மண்டைதீவு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கஞ்சா தொகை கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வாறாயினும், சந்தேகநபர்கள் எவரும் இதன்போது கைது செய்யப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கேரள கஞ்சாவின் பெறுமதி சுமார் 60 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படும் நிலையில் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் குறித்த கஞ்சா பொதிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். இந்நிலையில், தொடர்ந்தும் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளின் தேசிய அடையாள அட்டைகளை பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும் ...
கொவிட் தொற்றால் மரணித்த 91%மானோர் எவ்வித தடுப்பூசியையும் பெறாதோர் - தேசிய தொற்று நோய் தடுப்பு பிரிவி...
நோயாளிகளின் எண்ணிக்கை துரிதவேகத்தில் அதிகரித்தால் நாடு மீண்டும் முடக்கப்படலாம் – சுகாதார அதிகாரிகள் ...
|
|
|
ஜனாதிபதி ஆர்வம் : சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவுகளின் அர்ப்பணிப்பு - தடுப்பூசியில் வல்லரசு நாடுக...
2022 ஆம் ஆண்டில் வேலைநிறுத்தத்தால் பதினேழாயிரத்து தொண்ணூற்றைந்து மனித நாள்கள் இழக்கப்பட்டுள்ளன !
அரசியல் கட்சிகள் - தேர்தல்கள் ஆணைக்குழு இடையில் சந்திப்பு - சட்டத்தில் உள்ள விதிகள் குறித்து அரசியல்...


