மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் யோசனைகளை சட்டமாக்க முயற்சி – மின்சக்தி அமைச்சு!
Friday, July 15th, 2016மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள சில யோசனைகளை சட்டமாக்குவதற்கு மின்சக்தி மற்றும் புதுப்பித்தல் சக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி மின்சக்தி தொடர்பான பொறுப்பு மற்றும் செயற்திறனை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு யோசனைகளை சட்டமாக மாற்றுவதற்குரிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
மின்சாரத்தை பிறப்பித்தல் மற்றும் விநியோகித்தல் செயற்பாடுகளை செயற்திறனுடன் முன்னெடுத்தல், பாவனையாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் தொடர்பிலான பல்வேறு யோசனைகள் மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுளார்
பாவனையாளர்களுக்கு தடையின்றி தொடர்ச்சியாக மின்சாரம் விநியோகிக்கப்படாமை மற்றும் சேவையில் காணப்படுகின்ற குறைப்பாடுகள் தொடர்பில் சட்டங்களுக்கு அமைவாக எதிர்காலத்தில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கூறினார்.
Related posts:
அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிக்காகப் பயன்படுத்தலாம்!
வல்லரசுகளின் மோதல் தளமாக கொழும்பு துறைமுக பொருளாதார நகரம் மாற்றமடையாது - இராஜாங்க அமைச்சர் அஜித் நி...
எமது ஆட்சியில் அனைத்து சவால்களையும் முறியடித்தே தீருவோம் - அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பில் பிரதமர...
|
|