மகளிர் தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்!

Tuesday, March 8th, 2016

2016ஆம் ஆண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு போஷாக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சித்திட்டமும், ஆயர்வேத வைத்திய முகாமும், பாடசாலை மாணவர்களுக்கு பற்சிகிச்சை முகாம் ஒன்றும் நுவரெலியா பிரதேச சபையின் ஏற்பாட்டில் 08.03.2016 அன்று அக்கரப்பத்தனை ஹோல்புறுக் தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது.

இதில் பிரதேச சபையின் செயலாளர் பீ.பிரதீப் அவர்கள் அதன் உத்தியோகத்தர்கள், லிந்துலை பொது சுகாதார அதிகாரி உட்பட பொது சுகாதார உத்தியோகத்தர்கள், குடும்ப நலன் உத்தியோகத்தர்கள், மற்றும் அதிபர் உட்பட ஆசிரியர்கள், பொது மக்கள் கலந்து கொண்டார்கள்.

SAM_1511

SAM_1454

Related posts: