பொது இணக்கத்தின் கீழ் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி!

Sunday, May 7th, 2017

தேசிய அபிவிருத்திக்கான இலக்கை நாடு அடைய வேண்டுமாயின் மாகாண சபைகளின் நடவடிக்கைகளில் ஒரு ஒழுங்குமுறையான தன்மை இருக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்கம் மற்றும் மாகாண சபைகளுக்கு இடையிலான ஒத்துழைப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.ஹபரணை பிரதேசத்தில் நடைபெற்ற 33 வது முதலமைச்சர்களின் மாநாட்டில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

அனைத்து மாகாண சபைகளும் ஒரு பொது இணக்கத்தின் கீழ் இயங்க வேண்டும்.வினைத்திறனான மக்கள் சேவையை வழங்க மக்கள் பிரதிநிதிகள் கடமைப்பட்டுள்ளனர் என்றும் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார். முதலமைச்சர்களின் மாநாடு வடமதத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்னவின் வழிநடத்தில் வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி ஜயநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது.

Related posts: