பொது இடத்தில் வைத்து புகைத்த நபருக்கு நீதிபதி கொடுத்த உத்தரவு!

Thursday, April 6th, 2017

யாழ். சாவகச்சேரி பகுதியில் பொது இடத்தில் வைத்து புகைபிடித்த நபரை எச்சரித்த நீதிபதி 80 மணி நேரம் சமூகப் பணியில் ஈடுபடுமாறு உத்தரவிட்டுள்ளார்.

சாவகச்சேரி பொதுச் சந்தையில் வைத்து குறித்த நபர் பொதுமக்களுக்கு முன்பாக புகைபிடித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு, மதுவரி திணைக்களத்தினர் இவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்திருந்தனர்.

குறித்த வழக்கு விசாரணையானது சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த நபருக்கு 1000 ரூபா தண்டப்பணம் விதித்த நீதிபதி, 80 மணி நேர சமூகப் பணியில் ஈடுபடுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இதன்போது நீதிபதி குறித்த நபருக்கு பொது இடங்களில் புகைபிடிக்க கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: