பொதி மாற்றி அரிசியினை விற்றமுயன்ற இரண்டு வர்த்தகர்களுக்கு அபராதம்!

Saturday, August 13th, 2016

கிளிநொச்சிப்பகுதியில் காலாவதியான இறக்குமதி செய்யப்பட்ட அரிசியினை பொதி மாற்றிய இரண்டு வர்த்தகர்களுக்கு 16 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் கைப்பற்றப்பட்ட அரிசியை அழிக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா நேற்று (11) உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்;யப்பட்ட காலாவதியான அரிசியை மாற்றி பொதி செய்த அரிசியாலை உரிமையாளர் மற்றும் வர்த்தகர் ஒருவரிடமிருந்தும் காலாவதியான 25 கிலோகிராம் எடை கொண்ட 152 பைகளை பாவனையாளர் அதிகாரசபையினர் மீட்டனர்.

அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முதலாவது குற்றவாளிக்கு பத்தாயிரம் ரூபாயும் இரண்டாவது குற்றவாளிக்கு ஆறாயிரம் ரூபாயும் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் அரிசியினையும் அழிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்

Related posts: