பெறுமதிமிக்க உறவை இலங்கையுடன் கொண்டுள்ளோம் – பாகிஸ்தான்!

Monday, August 15th, 2016

இலங்கையுடன் பாகிஸ்தான் பெறுமதிமிக்க உறவை கொண்டுள்ளதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அந்த நாட்டின் பிரதம நீதியரசர் அன்வர் ஸாஹீர் ஜமாலி தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் இந்த உறவை மேலும் பலப்படுத்திக்கொள்ள பாகிஸ்தான் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் நடைபெற்ற பாகிஸ்தானின் 70வது சுதந்திர தின நிகழ்வில் பிரதம விருந்தினராக பங்கேற்பதற்காக அவர் இங்கு வந்துள்ளார். இதேவேளை இலங்கையில் உள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரும் இலங்கையுடன் பாகிஸ்தான்தீர்க்கமான உறவை விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

Related posts: