புதிய அரசியலமைப்பு தொடர்பான அறிக்கை பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடம்.

Wednesday, June 1st, 2016

புதிய அரசயலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் அரசியல் கட்சிகளிடம் இருந்து யோசனைகளை பெறுதல் எதிர்வரும் இரண்டு மாதங்களில் முடிவுக்கு கொண்டுவரப்படும் என பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பு தொடர்பில் மக்களின் கருத்துக்கள் அறியும் குழுவின் அறிக்கை நேற்று அலரி மாளிகையில் வைத்து பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இன்று காலை சபாநாயகரிடம் குறித்த அறிக்கை சமர்பிக்கப்பட்டதுடன் எதிர்வரும் 07 ஆம் திகதி ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Related posts: