இலங்கையில் ஒரு வாரத்தில் 338 பேருக்கு கொரோனா தொற்று – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Friday, May 1st, 2020

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுடன் 338 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்..

அத்துடன் இவ்வாறு இனங்காணப்பட்டவர்களில் 264 பேர் கடற்படையினர் மற்றும் அவர்களின் உறவினர்கள் என்றும், 6 பேர் தரைப்படையினர் என்றும் இருவர் விமானப் படையினர் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று 30 பேர் தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களில் 22 பேர் கடற்படையினர். ஒருவர் விமானப்படை சிப்பாய். இதர 7 பேர் தொற்றுக்குள்ளானவர்களின் உறவினர்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

“நாட்டு மக்களின் நலனைக் கருத்தில்கொண்டே ஊரடங்குச் சட்டம் அவ்வப்போது அமுலுக்கு வருகின்றது. இருந்தாலும் இயன்றளவு விரைவில் சுகாதாரத் துறையினரின் ஒத்துழைப்புடன் நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவோம்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் படையினர் தரையில் படுக்கின்றார்கள் என்றும்அவர்கள் கவனிக்கப்படுவதில்லை என்றும் விமர்சனங்கள் சொல்லப்படுகின்றன. அது குறித்து நாம் தேடுகின்றோம்.

மக்களைக் கட்டிலில் படுக்க வைக்க நாங்கள் தரையில் படுப்போம். அதற்காக நாங்கள்வெட்கப்படவில்லை. தரையிலும் காடுகளிலும் படுத்த அனுபவங்கள் எங்களுக்கு உள்ளன.

அரச புலனாய்வுத் துறையினரின் ஒத்துழைப்புடன் கொரோனா வைரஸ்தொற்றுக்குள்ளானோரைப் பிடித்து வருகின்றோம். ஏனெனில் தொற்றுக்குள்ளானவர்கள்பலர் அவர்களுடன் பழகியவர்கள் விபரங்களை மறைப்பதால் இப்படி நடக்கின்றன.

இயன்றளவில் நாங்கள் நிலைமைகளைக் கட்டுப்படுத்தி வருகின்றோம். ஊரடங்குச்சட்டத்தை நீடிக்கவே மக்கள் கோருகின்றார்கள். நிலைமைகளைப் பார்த்து சரியான முடிவை அரசு எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts: