இலவச தொழில்பயிற்சி கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம்!

Tuesday, December 19th, 2017

இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை யாழ்.மாவட்டத்தில் தற்கால வேலை வாய்ப்பை மையமாக கொண்டு முழுநேர மற்றும் பகுதிநேர தொழிற்பயிற்சி கற்கை நெறிகளை நடத்தி வருகின்றது. காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பின்வரும் கற்கை நெறிகள் முற்றிலும் இலவசமாக 02.01.2018 இல் ஆரம்பமாகவுள்ள இக்கற்கை நெறிகளாவன,

காய்ச்சி இணைப்பவர் (வெல்டிங்), மின்னிணைப்பாளர், உணவு மற்றும் குளிர்பானம் பரிமாறுபவர், அறை ஊழியர், அலுமினியம் பொருத்துநர், மோட்டார் சைக்கிள் திருத்துநர், பெண்கள் மற்றும் சிறுவர்களிற்கான ஆடை வடிவமைப்பாளர், நீர்க்குழாய் பொருத்துநர், குளிரூட்டி மற்றும் குளிர்சாதன உபகரணங்கள் திருத்துநர் ஆகும். இக்கற்கை நெறிகள் அனைத்தும் தேசிய தொழில் தகைமை (Nஏஞ) சான்றிதழுக்கான பயிற்சிகளாகும். இக்கற்கை நெறிகளை கற்க விரும்புவர்கள் தங்கள் பதிவுகளை அலுவலக நேரத்தில் மாவட்ட அலுவலகம், 4 ஆம் மாடி, வீரசிங்கம் மண்டபம், இல.12, கே.கே.எஸ். வீதி, யாழ்ப்பாணம் (021 222 7949) அல்லது வலந்தலைச்சந்தியில் உள்ள காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்தில் எதிர்வரும் 31.12.2017 ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளுமாறு உதவிப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்

Related posts: