பிரதமரால் விக்ரோறியா கல்லூரி மாணவிக்குச் சான்றிதழ்!

Friday, August 3rd, 2018

சிறப்புத் திறமைகளை வெளிப்படுத்தியமைக்காக தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து யாழ் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி மாணவிக்குச் சான்றிதழ் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. கல்லூரியின் மாணவத் தலைவி மதுஹரிசத்தியலோகநாதனே அந்தச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டார்.

கல்வி அமைச்சின் சுபஹ புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தில் சிறப்புத் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் அண்மையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து வழங்கப்பட்டுள்ளன. எதிர்காலச் சவால்களை வெற்றிகொள்வதற்காகத் தேவைப்படும் படைப்பாற்றலுடன் கூடிய இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

புதிய கண்டுபிடிப்பு, அழகியல், விளையாட்டுத் துறைகளில் சிறப்புத் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கே இந்த மதிப்பளித்தல் வழங்கப்படுகின்றது. அதற்கான சான்றிதழைப் பெற்ற மாணவியைப் பாடசாலைச் சமூகம் வாழ்த்தியுள்ளது.

Related posts: