பாரவூர்தி தடம்புரள்வு – சாரதி படுங்காயம்
Sunday, March 27th, 2016
கித்துல்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கொழும்பிலிருந்து ஹட்டன் வழியாக ராகலை நோக்கி சென்ற பாரவூர்தி ஒன்று வீதியை விட்டு விலகி கித்துல்கலை கலுகல பகுதியில் சிங்கள வித்தியால சிறுவர் பாடசாலை கட்டிடத்தின் பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்று(27) அதிகாலை 3 மணியளவில் இவ்விபத்தில் சாரதி படுங்காயங்களுக்குள்ளாகி கினிகத்தேனை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
சுன்னாகம் பொலிசார் அடித்தே கொன்றனர் - நீதிமன்றில் வாக்குமூலம்!
ஆவா குழுவை இயக்குவது சுவிஸர்லாந்திலுள்ள தமிழ் அமைப்பு!
இறக்குமதி பொருட்கள் சிலவற்றை மட்டுப்படுத்த தீர்மானம் - இறக்குமதி கட்டுப்பாட்டு ஆணையாளர் தெரிவிப்பு!
|
|
|


