பாதுகாப்பு கடமையிலுள்ள படையினரை பாதுகாக்க உடனடி நடவடிக்கை – வெலிசர கடற்படை முகாம் முற்றாக முடக்கம்!
Saturday, April 25th, 2020கொரோனா தொற்றிருந்தும் பாதுகாப்பு கடமையிலுள்ள படையினரை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், சகல கடற்படை வீரர்களுக்கும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு விடுமுறை வழங்கப்படாத நிலையில் அனுமதி வழங்கப்பட்ட கடமைகளுக்கு மட்டுமே முகாம்களை விட்டு வெளியேற முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், வெலிசர கடற்படை முகாம் தற்போது முடக்கப்பட்டுள்ள நிலையில் அதற்குள் இருந்து வெளியேறவும் உட்பிரவேசிப்பதற்கும் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுற்றுலா செல்வதற்கான சிறந்த தீவாக, இலங்கை தேர்வு!
காரணமின்றி அதிக கட்டணங்கள் அறவீடு - நிவாரணம் வழங்குமாறு மின்சாரத்துறைக்கு பரிந்துரை!
இரட்டை பிரஜாவுரிமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவே இறுதி தீர்மானத்தை எடுக்கும் - சபாநாயகர் மஹிந்த ய...
|
|