பல்கலை. கல்விசாரா ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில்
Thursday, March 31st, 2016பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.
அரசினால் வழங்கப்படும் கொடுப்பனவுகள் இதுவரை தமக்கு கிடைக்கப்பெறவில்லை என இலங்கை பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் பல மாதங்களாக தெரிவித்து வந்ததாகவும் , கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் கடிதம் மூலம் அறிவித்ததாகவும் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.
எனினும் தமது கோரிக்கைளுக்கு எவரும் செவிசாய்க்கவில்லை என இலங்கை பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்
Related posts:
110 பணிப்பெண்கள் நாடு திரும்பினர் : இருவர் ஊனமாகிய சோகம்!
'பீல்ட் மார்ஷல்' பதவி வகிப்பவர்களுக்கு இராணுவத்தால் சம்பளமோ, ஓய்வூதியமோ வழங்கப்படாது - பாதுகாப்பு இ...
இலங்கையின் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 2 இலட்சத்து 30 ஆயிரத்தை கடந்தது - மரணமானவர்களின் எண்ணிக்கையு...
|
|