பருத்தித்துறை உணவகங்களில் திடீர் சோதனை!
Wednesday, November 30th, 2016உணவு வாரத்தை ஒட்டி பருத்தித்துறை நகரத்தில் உள்ள உணவகங்கள் மீது சுகாதாரப் பிரிவினர் அண்மையில் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது சில உணவகங்களில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.செந்தூரன் தலைமையில் சுகாதாரப் பரிசோதகர்கள் குழு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டது காலாவதியான உணவுப் பொருட்களை வைத்திருந்த உணவக உரிமையாளர்கள் மீது பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினால் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
சேதங்களை மதிப்பீடு செய்வதில் சிரமம் - நிதி அமைச்சு!
அரச நிர்வாகத்தை சீரமைக்க அனைவரும் உறுதியளித்துள்ளனர் - அரச ஊழியர்கள் வசதியான உடையில் வரலாம் என்ற சுற...
மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மேல் மாகாணம் அதிக பங்களிப்பு!
|
|