பணியை புறக்கணிக்காத சுகாதார சேவையாளர்களை கௌரவிக்க நடவடிக்கை – பாராட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிப்பு!
Thursday, March 16th, 2023
சுகாதார போராட்டத்திற்கு ஆதரவளிக்காத நோயாளர்களின் நலன்கருதி செயற்பட்ட சுகாதார சேவையாளர்களை பாராட்ட சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் ஆலோசனைக்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, பணிப்புறக்கணிப்பின் போது கடமையில் இருந்த மருத்துவர்கள் முதல் சிற்றூழியர்கள் வரையான விபரங்கள் திரட்டப்படவுள்ளன. அதனை அடுத்து அவர்களுக்கான பாராட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மன விரக்தியில் 39 வயது குடும்பஸ்தர் தூக்கிட்டுத் தற்கொலை
கொரோனாவை கட்டுப்படுத்த ஊடகவியலாளர்கள் ஆற்றிவரும் பணி பாராட்டத்தக்கது - அமைச்சர் ஹெகலிய தெரிவிப்பு!
355 ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வடக்கு மாகாண பிரதம செயலாளரால் வழங்கிவைப்பு!
|
|
|


