அரசியலமைப்பு சபைக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கும் பணிகள் இந்த வாரம்!
Thursday, October 4th, 2018அரசியலமைப்பு சபைக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கைகள் இந்த வாரம் நடைபெறும் என நாடாளுமன்ற பிரதிச் செயலாளர் நீல் இத்தவல ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அரசியலமைப்பு சபைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ள சிவில் சமூக உறுப்பினர்கள் மூவர் குறித்து பெயர்கள் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
தற்போதைய பிரதம நீதியரசர் பியசாத் டெப் எதிர்வரும் 12ம் திகதி ஓய்வு பெறவுள்ளதாகவும், குறித்த பதவி தொடர்பிலும் தீர்மானம் ஒன்றினை எட்ட அரசியலமைப்பு சபையானது அதற்கு முதல் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
Related posts:
காலஞ்சென்ற கந்தையா சச்சிதானந்தத்தின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதிஅஞ்சலி!
யாழ். மத்திய கல்லூரி க.பொ. த உயர்தரம்- 2017 மாணவர்களின் கவனத்திற்கு....
அர்த்தம் மாறுப்படும் வகையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை சட்டவிரோதமானது - சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட...
|
|