சதொச நிலையங்கள் ஊடாக 1,000 ரூபாய் நிவாரணப்பொதி – அமைச்சர் பந்துல குணவர்தன!
Saturday, May 29th, 2021சதொச விற்பனை நிலையங்கள் மூலம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அத்தியாவசிய பொருட்களுடன் 1,000 ரூபாய் நிவாரணப்பொதி வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர், இந்த பொதிகளில் 10 அத்தியாவசிய பொருட்கள் இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
அதன்படி வெள்ளை நாட்டு அரிசி, சிவப்பு அரிசி, கோதுமை மா, பருப்பு, நூடில்ஸ்,சீனி, 200 கிராம் கருவாடு, 100 கிராம் தேயிலை, ஒரு பக்கெட் உப்பு மற்றும் முக்கவசம் ஆகியவை அடங்கும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
எரியும் காட்டுத்தீ - போராட்டத்தில் தீயணைப்பு வீரர்கள்!
சவாலை ஏற்றுக்கொள்வதற்கு எதிர்க்கட்சி தரப்புகள் தயக்கம் - நாளை புதிய அமைச்சரவை பதவியேற்க வாய்ப்பு?
ஏப்ரல் 21 தற்கொலை தாக்குதல்களுக்கு இன்றுடன் மூன்று ஆண்டுகள் பூர்த்தி – உயிரிழந்தோரை நினைவுகூர்ந்து த...
|
|