ஈரான் அரசு அழைப்பு – பயணமானார் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி – சர்வதேச ஆய்வு நிறுவனத்திலும் விசேட உரை!
Saturday, August 5th, 2023வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஈரானுற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். ஈரானின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியனின் அழைப்பின் பேரில், இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.
நேற்று ஈரானுக்கு விஜயம் மேற்கொண்ட வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி எதிர்வரும் 07 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஈரான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்; மற்றும் ஏனைய அரசாங்க அதிகாரிகளுடன் அவர் சந்திப்புக்களிலும் ஈடுபடவுள்ளார்.
ஈரானின் அரசியல் மற்றும் சர்வதேச ஆய்வுகள் நிறுவனத்தில் வெளிவிவகார அமைச்சர் உரை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, ஈரான் ஜனாதிபதி; இப்ராஹிம் ரைசியையும் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்க அமைச்சரவை அனுமதி - அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் ப...
மாணவர்களுக்கு எமனாக மாறிய இழுவைப்படகு - குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்தில் 6 மாணவர்கள் பலி – மேலு...
எரிசக்தித் துறைக்கு மேலதிகமாக விவசாயம் மற்றும் கைத்தொழில் துறையிலும் முதலீடுகளை மேற்கொள்ளுங்கள் - ஈர...
|
|