நீரில் மூழ்கி யாழில் இருவர் உயிரிழப்பு!
Wednesday, December 28th, 2016
யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற இரு வேறு சம்பவங்களில் கடல் மற்றும் குளத்தில் நீராடிய ஒன்பது வயதுச் சிறுவனொருவனும், ஆசிரியரொருவரும் உயிரிழந்துள்ளனர்.
மாதகல் இளவாலைத் துறைப் பகுதியில் தனது நண்பர்களுடன் குளிக்கச் சென்றிருந்த சங்கானைப் பகுதியைச் சேர்ந்த 36 வயதான ஆசிரியரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இவர் யாழ்.இளவாலை சென். ஹென்றீஸ் பாடசாலையின் ஆசிரியராவார்.
யாழ்.கந்தரோடைப் பகுதியிலுள்ள பினாக்காய்க் குளத்தில் நேற்று மாலை மூன்று சிறுவர்களுடன் நீராடச் சென்ற அளவெட்டிப் பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயதான பரமேஸ்வரன் சாருஜன் என்ற சிறுவனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான். மேற்படி இரு உயிரிழப்புக்களும் யாழில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related posts:
புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கும் திட்டம் ஏதும் என்னிடம் இல்லை - முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர்...
சாவகச்சேரி வைத்தியசாலையில் பொலிஸ் காவலரண் அமைக்குமாறு நீதிவான் ஆலோசனை!
பதில் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ள இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு!
|
|