மற்றுமொரு ஊடகவியலாளருக்கும் கொரோனா தொற்று உறுதி – இதுவரை 5 ஊடகவியலாளர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் – சுகாதார தரப்பினர் அறிவிப்பு!
Wednesday, November 4th, 2020நாடாளுமன்றத்திற்கு செய்தி சேகரிப்பிற்காக சென்று கொரோனா தொற்றுக்கு இலக்காகிய மேலும் ஓர் ஊடகவியலாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நாட்டில் இதுவரை 5 ஊடகவியலாளர்கள் தொற்றுக்குள்ளான நிலையில் இறுதியாக அடையாளம் காணப்பட்ட ஊடகவியலாளர் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிபவர் என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் ஆங்கிலப் பத்திரிகையை சேர்ந்த ஓர் ஊடகவியலாளர் முதன்முறையாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவராக அடையாளம் காணப்பட்டதுடன், அவருக்குப் பின்னதாக மூன்று ஊடகவியலாளர்களுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இவர்கள் அனைவரும் 20ஆம்,21ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் நடந்த 20ஆவது திருத்தம் மீதான விவாதம், வாக்கெடுப்புகளை அறிக்கையிடச் சென்றவர்கள்.
இதேவேளை அன்றைய தினத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும்கூட நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
மதுபோதையில் ரகளை செய்த நபருக்கு 6 வருடங்கள் சிறை : சாவகச்சேரி நீதிமன்றம் தீர்ப்பு!
சூரிய கிரகணத்தால் நிகழப்போகும் மிகப்பெரிய மரணம்! ஜோதிடர் பாலாஜி ஹாசனின் கணிப்பு!
யாழ்.கீரிமலையில் பிதிர்க்கடன் செலுத்த ஒன்றுகூடிய மக்களுக்கு அன்டிஜன் பரிசோதனை! சுகாதார நடைமுறையை மீற...
|
|