நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட திருநெல்வேலி வளாக வீதி நெல்சிப் திட்டத்தின் கீழ் கொங்கிறீர்ட் வீதியாக மாற்றம்
Wednesday, April 6th, 2016நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட திருநெல்வேலி வளாக வீதி நெல்சிப் திட்டத்தின் கீழ் கொங்கிறீர்ட் வீதியாக மாற்றப்பட்டுள்ளது. வீதிப் புனரமைப்புப் பணிகள் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டுத் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
580 மீற்றர் நீளமான குறித்த வீதி கடந்த பல வருடங்களாகப் புனரமைக்கப்படாத காரணத்தால் வீதி மோசமாகச் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. இதன் காரணமாக இந்த வீதியால் பயணிக்கும் பல்வேறு தரப்பினரும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர்கள், கொக்குவில் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்கள் எனத் தினமும் நூற்றுக் கணக்கானோர் பயன்படுத்தும் இந்த வீதி புனரமைக்கப்பட்ட காரணத்தால் பலரும் நன்மையடைந்துள்ளனர்.
5.9 மில்லியன் ரூபா செலவில் இந்த வீதியின் புனரமைப்பு வேலைகள் இடம்பெற்றதாக நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்தார்.
இதேவேளை, 620 மீற்றர் நீளமான கொக்குவில் மணியகாரர் வீதியின் புனரமைப்பு வேலைகளும் நெல்சிப் திட்டத்தின் கீழ் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகச் சபையின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|