இணைம் ஊடாக கொள்வனவு செய்வோருக்கு ஆபத்து!

Thursday, August 11th, 2016

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்யும் நபர்களது பணம், இணையங்கள் ஊடாக கொள்ளையிட்டு வங்கிகளில் வைப்பிலிடும் வியாபாரம் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை கனணி அவசரப்பிரிவுக்கு இது தொடர்பில் முறைபாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையங்கள் ஊடாக பொருட்களை பதிவு செய்யும் நபர்கள் இந்த மோசடிக்குள் சிக்கியுள்ளதாக கனணி அவசரப்பிரிவின் ஊடகப் பேச்சாளரும், பொறியியலாளருமான ரொஷான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.

பொருட்களை தருவிக்கும் நபர்களின் இணையங்கள் ஊடாக பலவந்தமாக உள்நுழையும் கொள்ளையர்கள், பொருட்களை பதிவு செய்யும் நபர்களின் வங்கி கணக்குகளில் மாற்றங்களை செய்துள்ளதாக அறிவித்து, அதனூடாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் பணங்களை வைப்பிலிடுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான பணம் கொள்ளை தொடர்பில் இந்த வருடத்தில் இதுவரை 10 இற்கும் அதிகமான முறைபாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: