நல்லூரில் தடையற்ற மின்சாரத்துக்கு மின்சாரசபை நடவடிக்கை!
Sunday, August 19th, 2018
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயப் பெருந்திருவிழா காலத்தில் தடையின்றிய மின் விநியோகத்துக்கான ஏற்பாடுகளை இலங்கை மின்சார சபை மேற்கொண்டுள்ளது.
உற்சவ காலத்தில் இடையறா மின் விநியோகத்துக்கென இலங்கை மின்சார சபையின் வடமாகாண பிரதிப் பொது முகாமையாளரின் ஏற்பாட்டில் கொலன்னாவையில் இருந்து 800 மெகாவாட் கொள்ளளவு கொண்ட மின் பிறப்பாக்கி கொண்டுவரப்பட்டுள்ளது.
தினமும் இரவு 10 மணி வரை ஆலயச் சுற்றாடலுக்கான முழு விநியோகமும் இந்த மின் பிறப்பாக்கியின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
Related posts:
கொரோனா தொற்றின் வீரியம் மக அதிகரிப்பு - தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்வு...
பாலூட்டும் தாய்மார் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதனால் எந்தப் பாதிப்பும் கிடையாது – கொழும்பு ஐ.டி.எச் வை...
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 636 பேர் கைது!
|
|