தோட்டத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த முதியவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு
Thursday, November 3rd, 2016
தோட்டத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த முதியவரொருவர் திடீரென மயங்கி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் நேற்றுப் புதன்கிழமை(02) மதியம் யாழ். சுன்னாகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விவசாயியான குறித்த முதியவர் தோட்டத்தில் வழமை போன்று வேலையிலீடுபட்டிருந்த போது திடீரென மயங்கி நிலத்தில் விழுந்துள்ளார். அருகில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் குறித்த முதியவரை மீட்டுத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.
எனினும், முதியவரின் உடலைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் அதேயிடத்தைச் சேர்ந்த கந்தையா வரதராஜ்( வயது-60) என்ற விவசாயியே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.

Related posts:
பாதுகாப்பு தலைமை அதிகாரி - பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு!
சுத்தமான குடிநீர் பெற்றுத்தாருங்கள் என்றே மக்கள் எம்மிடம் கோருகின்றனர் - எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக...
வியாபாரிகள் உணவுப் பொருட்கள் பதுக்கி வைப்பதைத் தடுக்க எதிர்காலாத்தில் புதிய சட்டம் – பிரதமர் தெரிவிப...
|
|
|
சுதேச மருந்து வெற்றியளித்தால் சர்வதேச அழுத்தங்கள் வருவதுடன் மேற்கத்திய மருத்துவத்துக்கு பெரும் சவாலா...
2020ஆம் ஆண்டு மதுபாவனைக்காக 20,000 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகையை இலங்கை மக்கள் செலவிட்டுள்ளனர் - ...
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் சான்றிதழ்களின் செல்லுபடியாகும் காலத்திற்கு எந்தவித கால...


