தொண்டர் ஆசிரியர் 445 பேருக்கு நிரந்தர நியமனம்!
Saturday, February 11th, 2017கிழக்கு மாகாணத்தில் விரைவில் 445 பேருக்கு தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஏ.எஸ்.எம்.அனிஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கான அமைச்சரவை அங்கிகாரமும் கிடைக்கப்பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் 135 பேருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 61 பேருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் 249 பேருக்குமாக 445 பேருக்கு தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது.
கூடிய விரைவில் அனைவருக்கும் நேர்முகப் பரீட்சைக்கான கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டு ஒரு மாதத்துக்குள் நியமனங்கள் வழங்கி வைக்கப்படவுள்ளது. பாடசாலைகளில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றி வரும் சிலர், தாமதமாக தங்களது தகவல்களை வழங்கியவர்களின் விவரங்கள் மாகாண கல்வி அமைச்சரினால் அமைச்சசரவை அங்கிகாரத்துக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Related posts:
விரைவில் முச்சக்கரவண்டிகளுக்கு இருக்கை பட்டி!
போதனாசிரியர் வெற்றிட ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!
மாநகர பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு கல்வி அமைச்சர் யோசனை - அமைச்சரவை அங்கீகாரம்!
|
|