தேசிய சமூக அபிவிருத்தி கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Tuesday, November 21st, 2017

சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சின் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினரால் 2018 ஆம் ஆண்டு கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கற்கை வகுப்புகள் கிளிநொச்சியில் உள்ள வடபிராந்திய நிறுவனத்தில் இடம்பெறும் எனவும் ஜீ.சி.ஈ உயர்தரப் பரீட்சையில் 3 பாடங்களில் சித்தியெய்தியவர்கள் விண்ணப்பிக்கமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூகப்பணி டிப்ளோமா, பெண்கள் அரசியல் வலுவூட்டல் டிப்ளோமா, உளவளத்துணை டிப்ளோமா, சமூகப் பராமரிப்பு டிப்ளோமா, முதுமையியல் மற்றும் முதியோர் பராமரிப்பு டிப்ளோமா, சைகை மொழி மொழிபெயர்ப்பு டிப்ளோமா போன்ற கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன எனவும் விண்ணப்பிக்க விரும்புவோர் கிளிநொச்சியிலுள்ள வடபிராந்திய நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

வெற்றியீட்ட வேண்டுமென்ற மனநிலையில் இலங்கையின் வீரர்கள் இல்லை : அமைச்சர் நாமல் கடும் விசனம்!
நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் மோசமடைந்த பின்னரே சிறந்த நிலைக்கு திரும்பும் – பிரதமர் ரணில் விக...
கசப்பான மறக்க முடியாத அனுபவம் உள்ளதால் எதனையும் அலட்சியப்படுத்த முடியாது - தாக்குதல் நடத்தப்படவுள்ள...