மரத்தால் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு!

Friday, February 8th, 2019

அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் மரத்தால் தவறி வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வீட்டின் வேலியைக் கட்டுவதற்கு மரத்தில் ஏறி கொப்புகளை வெட்டும்போது தவறி வீழ்ந்ததன் காரணமாகவே அவர் உயிரிழந்தார் என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் அச்சுவேலி கதிரிப்பாயைச் சேர்ந்த பசுபதி செந்தில்குமரன் (வயது 42) என்ற நபரே உயிரிழந்தார்.

Related posts: