தெல்லிப்பழை பொதுநூலகம் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்!
Thursday, July 19th, 2018
வலி வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட தெல்லிப்பழை உப அலுவலகப் பிரிவின் கீழுள்ள தெல்லிப்பழைச் சந்திக்கு அருகாமையில் இயங்கும் பொதுநூலகம் வாசகர்களின் நன்மை கருதி இரவு 8 மணி வரை திறந்திருக்குமென நூலகத்தின் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். வலி வடக்கு இடம்பெயர்வின்போது இந்த நூலகத்தின் கட்டடங்கள் அழிவடைந்த நிலையில் இருந்தன.
இதனையடுத்து வலி வடக்கு பிரதேச சபையினால் புதிய கட்டடம் அமைக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டதுடன் நூலக சேவைகள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.
இவ்வாண்டில் புதிய பிரதேச சபை தெரிவாகியதன் பின்பு தவிசாளர் சோ.சுகிர்தன் இந்த நூலக சேவை நேரத்தை அதிகரிக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு அமைவாக இந் நூலகத்தின் சேவைகள் இரவு 8 மணி வரை இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இளம் வர்த்தகர் சுலைமானின் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை மரபணு பரிசோதனைக்கு அனுப்ப உத்தரவு!
மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மீண்டும் இலங்கை மின்சார சபை அறிவுறுத்து!
சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகை பன்மடங்காக அதிகரிப்பு - ஜனாதிபதி ரணில் விக்ரமச...
|
|
|


