உடைமையில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் பண்ணாகத்தில் இளைஞன் கைது!

Friday, March 23rd, 2018

 உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞனொருவரை வட்டுக்கோட்டைப் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை(23) அதிகாலை கைது செய்துள்ளனர்.

ஒரு கிலோ 506 கிராம் கஞ்சாவை குறித்த இளைஞன் உடைமையில் வைத்திருந்துள்ள நிலையில் வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே குறித்த இளைஞனைப் பொலிஸார் கைது செய்தனர்.

கைதான இளைஞன் 19 வயதுடையவர் என்பதுடன் குறித்த இளைஞனிடம விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related posts: