தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் விலங்குகளால் கடியுண்ட 183 பேர் நவம்பரில் சிகிச்சை!
Thursday, December 8th, 2016
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கடந்த நவம்பர் மாதம் மாத்திரம் விலங்குகளால் கடியுண்டு 183 பேர் சிகிச்சை பெற்றுள்ளதாக வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, 152 பேர் நாய்க்கடிக்கு இலக்காகியுள்ளனர். நாய்க்கடிக்கு இலக்கானவர்களுக்கு விசர் நாய்க்கடித் தடுப்பூசி(ஏ.ஆர்.வி) ஏற்றப்பட்டுள்ளது. 9 பேர் பூனைக்கடிக்கு இலக்காகிச் சிகிச்சை பெற்றுள்ளதுடன், மற்றும் தலா ஒருவர் குரங்கு, எலிக்கடிக்கும் இலக்காகியுள்ளனர் எனவும் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts:
தென்னைப் பயிர்ச் செய்கை தொடர்பில் வழிகாட்டல்!
தேசிய பாதுகாப்பை பலப்படுத்த தீவிரமாக செயல்படுவேன் - மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவி...
கொள்கைகளின் அடிப்படையிலேயே நாட்டை முன்னேற்ற முடியும் - இராஜாங்க அமைச்சர் அநூப பஸ்குவெல் வலியுறுத்து!
|
|
|


