தென்மராட்சி கல்வி வலயத்தில் அதிபர் பதவிக்கு விண்ணப்பம் கோரல்!

Saturday, June 16th, 2018

தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட கெற்பெலி அ.த.க பாடசாலை அதிபர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலை அதிபர் பதவிக்கு இலங்கை அதிபர் சேவை தரம் 111 ஐச் சேர்ந்த அதிபர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும் அத்துடன் தென்மராட்சி வலயத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் இலங்கை அதிபர் சேவையைச் சேர்ந்தவர்களே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பதாரிகள் தற்போது கடமையாற்றும் பாடசாலையில் 3 வருடங்கள் தொடர்ச்சியான சேவையினை ஆற்றியிருத்தல் வேண்டும். விண்ணப்பதாரிகள் விண்ணப்ப முடிவு திகதியிலிருந்து ஆகக் குறைந்தது மூன்று வருடங்கள் கடமையாற்றக் கூடிய வயதெல்லையைக் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்க விரும்புவோர் படிவங்களை வலயக்கல்வி அலுவலக நிர்வாகக் கிளையில் பெற்று பூரணப்படுத்தி 28.06.2018 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியவாறு நேரடியாகவோ அல்லது பதிவுத் தபாலிலோ அனுப்பி வைக்குமாறு வலயக் கல்விப் பணிப்பாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts: