பனிப்புலம் வடலியடைப்பு ஊடாகப் புதிய பேருந்து சேவை!
Saturday, October 1st, 2016
பனிப்புலம் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பெருமுயற்சியால் நேற்று வெள்ளிக்கிழமை( 30) இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவை புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
காரைநகர் சாலையின் சத்தியக்காடு, பனிப்புலம், அரசடி, வடலியடைப்பு ஊடாக யாழ்ப்பாணத்திற்குச் செல்வதற்கான 782/5 இலக்க விசேட பேருந்து சேவையானது பனிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலய முன்றலில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வில் வடமாகாண இலங்கை போக்குவரத்துச் சபையின் முகாமையாளரும், காரைநகர் பேருந்து சாலை முகாமையாளரும், கோண்டாவில் பேருந்து சாலை முகாமையாளரும், பல உத்தியோகத்தர்களும் பங்குபற்றிச் சிறப்பித்தனர்.
Related posts:
கைத்தொழில் துறையினருக்கு தேவையான மூலப்பொருட்களை விரைவில் இறக்குமதி செய்ய நடவடிக்கை - அமைச்சர் விமல் ...
முச்சக்கரவண்டிகளுக்கு இன்றுமுதல் 10 லீற்றர் எரிபொருள் - ஏனைய மாகாணங்களிலும் கூடிய விரைவில் நடைமுறைப்...
நாட்டில் நடைமுறைக்கு வரும் வகையில் பல்வேறு பொருட்களுக்கு விசேட வியாபாரப் பண்ட வரி - ஜனாதிபதி ரணில் ...
|
|