தீப்பற்றியது நீதவான் நீதிமன்றம்!

Monday, April 30th, 2018

 

பண்டாரவளை நீதவான் நீதிமன்ற ஆவண காப்பகத்தில் இன்று காலை 9.20 மணியளவில் ஏற்பட்ட தீயினால் காப்பகத்தில் இருந்த பெருமளவான ஆவணங்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன.

குறித்த தீயினை பண்டாரவளை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரும், காவல்துறையினரும் இணைந்து கட்டுப்படுத்தியுள்ளனர்.

இந்தத் தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது திட்டமிட்டமுறையில் மேற்கொள்ளப்பட்டதா? என்பது குறித்த விசாரணைகளை பண்டாரவளை காவல்துறையினர்மேற்கொண்டுள்ளனர்.

Related posts: