க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பம்
Wednesday, December 21st, 2016
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் அடுத்த மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
இரண்டாவது கட்டம் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் 30 ஆம் திகதி இரண்டாம் கட்டப் பணிகள் நிறைவடையும் என அவர் குறிப்பிட்டார். இம்முறை ஒரு கோடியே 58 இலட்சம் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டது. இதற்காக 62 ஆயிரம் மதிப்பீட்டாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் 7 இலட்சம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
பொது எதிரியை எதிர்த்து நாடுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் - நெருக்கடிக்கு தீர்வாக இலங்கைக்கு உருளைக...
தபால் மூல வாக்களிப்பிற்கான 40,000 விண்ணப்பங்கள் நிராகரிப்பு - தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை - கிளிநொச்சி மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பெரும் போக நெற்செய...
|
|
|


