திருமண நாடகம்  செய்து ரூ45 லட்சம் அபகரித்த ஆசாமியும் பதிவாளரும் சிக்கினார்!

Saturday, October 8th, 2016

போலித்திருமணம் செய்து ஏமாற்றி 45இலட்சம் ரூபாவை சீதனமாகப் பெற்று மோசடி செய்தவரும் அதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் பதிவாளரும் கைது செய்யப்பட்டதுடன்அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் மன்று நேற்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பிரான்ஸை வசிப்பிடமாகக் கொண்ட இலங்கையின் கேகாலை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரை பதுளையை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் அலைபேசி மூலம் காதலித்துள்ளார். பின்னர் அந்தப் பெண் 2014ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்து யாழ்ப்பாணம் – கொழும்புத்துறையில் அந்தத் தமிழ் இளைஞரைத் திருமணம் முடித்துள்ளார்.

அவர்களுடைய திருமணத்தை வட்டுக்;கோட்டை பகுதியைச் சேர்ந்த திருமணப் பதிவாளர் விறைவேற்றியதாகக் கூறப்பட்டது. திருமணத்தின் பயனாக மணமகளினால் 45இலட்சம் ரூபா மணமகனுக்கு வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பதிவாளருக்கு 5ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது எனவும் கூறப்பட்டது. அதன்பின்னர் அந்தப் பெண் பிரான்ஸிற்கு சென்று திருமணம் முடித்த கணவனை தமது நாட்டுக்கு அழைப்பதற்காக திருமணப் பதிவு சான்றிதழை அனுப்பி வைக்குமாறு பல தடைவகள் கோரியுள்ளார்.

எனினும் திருமணச் சான்றிதழை அனுப்பி வைக்காமல் அவர் சாக்குபோக்கு கூறி வந்துள்ளார். அதனையடுத்து அந்த பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து விசாரித்த போது அவ்வாறான திருமணப் பதிவொன்று இடம்பெறவில்லையெனவும் இளைஞர் ஏற்கனவே திருமணமானவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து நம்பிக்கை துரோகம் செய்வதாகத் தெரிவித்து, யாழ்ப்பாண சிறப்புக் குற்ற விசாரணைப் பிரிவில் அப்பெண்ணால் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதனையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் பதுளையைச் சேர்ந்த ஆசாமியையும் வட்டுக்கோட்டையை சேர்ந்த திருமணப் பதிவாளரையும் கைது செய்தனர். அவர்கள் யாழ்ப்பாண நீதிவான் மன்றில் நேற்று முற்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரணை செய்த பதில் நீதிவான் க.அரியநாயகம் இருவரையும் இந்த மாதம் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

nik

Related posts: