திங்களன்று தேசிய தேயிலை விருதுவிழா!
Saturday, September 9th, 2017
2017 – தேசிய தேயிலை விருதுவிழாவிற்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் எதிர்வரும் திங்கட்கிழமையாகும் என்று பெருந்தோட்டத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
தேயிலைத் தொழில்துறையின் வளர்ச்சிக்காக ஆற்றல்களை வெளிப்படுத்தியவர்களை கௌரவித்து விருது வழங்குவதற்காக இந்த விழா நடத்தப்படுகிறது.
சிறந்த தேயிலைத் தோட்ட உரிமையாளர், சிறந்த தேயிலை ஏற்றுமதியாளர், சிறந்த தேயிலை கொழுந்தைப் பறிப்பவர்கள், சிறந்த தேயிலை நாற்றுக் கண்டுகளை உற்பத்தி செய்வோர் ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்படவிருப்பதாக பெருந்தோட்டத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற தமிழ் சிங்களப் புத்தாண்டு விழா
பொருளாதார நெருக்கடி – தொழில் பெறும் நோக்கில் நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் என்ணிக்கை அதிக...
எதிர்வரும் மூன்று மாதங்களில் கோம்பயன் மணல் மயானத்தில் மருத்துவக் கழிவுகளை எரிப்பதற்கான எரியூட்டி செய...
|
|
|


