தட்டாதெருவில் முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கிள்  விபத்து : இருவர் காயம்!

Wednesday, October 19th, 2016

யாழ்ப்பாணம் தட்டாதெருச்சந்தியில் முச்சக்கரவண்டியும், மோட்டார்ச் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று புதன்கிழமை(19) பிற்பகல்-02 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் சிக்கிச் சாரதிகள் இருவரும் காயங்களுக்குள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக    அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறிய ஒழுங்கையிலிருந்து யாழ். தட்டாதெருச் சந்திக்கு முச்சக்கர வண்டிச் சாரதி தனது வாகனத்தைச் செலுத்திய போது யாழ். நகரப் பகுதியிலிருந்து கே .கே .எஸ் வீதி நோக்கிச் சென்ற மோட்டார்ச் சைக்கிள் முச்சக்கர வண்டியுடன் மோதியமையாலேயே மேற்படி விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி விபத்துக் காரணமாக முச்சக்கர வண்டி கடுமையாகச் சேர்த்தமடைந்துள்ளதுடன் தடம் புரண்டுமுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts: