தடுப்பூசிகள் விற்கப்படுவதாக வெளியான தகவல் குறித்து விசாரணை!

பொரளை – கின்சி வீதியில் வீடொன்றில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் விற்பனை செய்யப்பட்டதாக வெளியான தகவல் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு மாநகரசபையின் பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவான் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
ஒரு தடுப்பூசி 1000 ரூபா முதல் 25000 ரூபா வரையிலும் உள்நாட்டவர்களுக்கும், 100,000 ரூபா வரை வெளிநாட்டவர்களுக்கும் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இது உறுதிப்படுத்தப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கால்நடைகளைக் கட்டி நெற்செய்கைக்கு உதவுக! விவசாயிகள் தரப்பில் கோரிக்கை!
ஊடகங்கள் உருவாக்கியதே பொன்சேகவுக்கான பதவி : அமைச்சர் ஹரிசன்!
பயன்படுத்திய முகக்கவசங்களை உரிய முறையில் அப்புறப்படுத்துங்கள் - பொதுமக்களிடம் கடல்சார் சூழல் பாதுகாப...
|
|