ஊடகங்கள் உருவாக்கியதே பொன்சேகவுக்கான பதவி : அமைச்சர் ஹரிசன்!

Wednesday, May 3rd, 2017

சரத்பொன்சேகாவுக்கு இராணுவ உயர் பதவி வழங்கப்படவுள்ளதான செய்தி ஊடகங்களால் உருவாக்கப்பட்டது என்ற கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் ஹரிசன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் அமைச்சரவையில் ஒரு நகைச்சுவையாகப் பேசப்பட்ட விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.குளியாப்பிட்டிய பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஊடகங்களால் திரிபுபடுத்தப்பட்ட செய்தியாகவே இது பரவியுள்ளது. இது நடைமுறை அரசை இராணுவ பாணி அரசாகக் காட்ட முயற்சிக்கும் செயலாகும். அத்துடன் இந்த விடயம் கோட்டாபய மீண்டும் அதிகாரத்திற்கு வரும் நிலையை போன்றது என்றார்.

Related posts: