இன்றும் 5 மணித்தியாலங்கள் வரை சுழற்சி முறையில் மின் துண்டிப்பு – இலங்கை மின்சார சபைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி!
Monday, April 4th, 2022
நாட்டில் இன்றையதினமும் 5 மணித்தியாலங்கள் சுழற்சி முறையில் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதனை அமுலாக்குவதற்கு இலங்கை மின்சார சபைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்தது.
முன்பதாக சுழற்சிமுறையில் 7 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பை அமுலாக்குவதற்கு இலங்கை மின்சாரசபை நேற்று கோரிக்கையினை முன்வைத்திருந்த போதிலும் அதனை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிராகரித்தது.
இதற்கமைய, A முதல் W வரையான அனைத்து வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் 3 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டது.
பின்னர் மாலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் துண்டிப்பை அமுலாக்க பொதுப் பயன்பாடுகள் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
புகையிரத சாரதிகள் காவலர்கள் பற்றாக்குறையால் புகையிரத போக்குவரத்து பாதிப்பு!
அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியது அவசியம் - பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவிப்பு...
நெருக்கடிகள் அனைத்தையும் சமாளிக்க உறுதியாக இருக்கிறோம் - அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!
|
|
|


