தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு சபாநாயகர் ஒப்பம்!

Tuesday, August 2nd, 2016

தகவல் அறியும் உரிமைச் சட்டமூலத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய கையெழுத்திட்டுள்ளதாக, நாடாளுமன்ற விவகார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், குறித்த சட்ட மூலத்துக்கு என்னானது என, பத்திரிகையாளர் ஒருவர் வினவிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும், சபாநாயகர் வௌிநாடு சென்றிருந்ததால் அதில் கையெழுத்திட தாமதமானதாகவும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்

Related posts: