கொரோனா தொற்று சமூக பரவலாவதை தடுக்க நடவடிக்கை – இராணுவ தளபதி தெரிவிப்பு!
Friday, July 10th, 2020கொரோனா தொற்று சமூக பரவலாக மாற்றமடைவதை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
“அத்துடன் கந்தக்காடு புனர்வாழ்வு மைய ஆலோசகர்கள் 8 பேரை விடுமுறையில் இருந்து அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கந்தக்காடு தனிமைப்படுத்தல் மையம் கொரோனா சிகிச்சை நிலையமாகவும் மாற்றப்படவுள்ளது.”என்றும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
இதனிடையே புனர்வாழ்வு மைய ஆலோசகருக்கு தொற்று கண்டறியப்பட்டமையினால் இலங்கையில் கொரோனா தொற்றானது சமூக பரவலாக மாற்றமடையும் அச்சம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வலிகாமம் பகுதியில் சிறுபோக வெங்காயச் செய்கை அறுவடை ஆரம்பம் !
வழக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் முறை குறித்த விசேட சுற்றுநிருபம் -நீதிச் சேவைகள் ஆணைக்குழு!
பெரும் போகத்திலிருந்து பயிர்ச் செய்கையை வெற்றிகரமான முன்னெடுக்க முடியும் - அமைச்சர் மகிந்த அமரவீர ந...
|
|