இலங்கையில் பாரியளவில் சிறுவர்கள் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளனர்!

Thursday, December 28th, 2017

நடப்பாண்டில் சிறுவர் சித்திரவதைகள் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 8548 முறைப்பாடுகள்கிடைத்துள்ளன.

இதில் பாலியல் துஸ்பிரயோகங்களும் உள்ளடங்குகின்றன. இந்த முறைப்பாடுகளில் கொழும்பிலேயே அதிக சம்பவங்கள்இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொழும்பில் 1232 கம்பஹாவில் 925 களுத்துறையில் 550குருணாகலையில் 490 யாழ்ப்பாணத்தில் 177 வவுனியாவில் 122 மட்டக்களப்பில் 170 முல்லைத்தீவில் 125 மற்றும்கிளிநொச்சியில் 117 என்ற அடிப்படையில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

மேலும் சிறுவர் சித்திரவதைகள் தொடர்பில் 1929 என்ற இலக்கங்களுக்கு தொடர்பை ஏற்படுத்தி முறைப்பாடுகளைதெரிவிக்கலாம் என்று அதிகார சபை அறிவித்துள்ளது.

Related posts: