சுவிஸ் நாட்டின் தூதுவருக்கும் வடமாகாண ஆளுநருக்குமிடையில் சந்திப்பு
Tuesday, June 14th, 2016
வடக்கின் நிலமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ். குடாநாட்டிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள சுவிஸ் நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவுகளிற்கான தூதுவர் கைன்ஸ் வோக்கர் நெடகோன் அடங்கிய குழுவினர் நேற்றுத் திங்கட்கிழமை(13-06-2016) வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுனர் செயலகத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் மத்திய அரசாங்கத்தினால் வடக்கில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகள் தொடர்பில் ஆளுநர் தூதுவருக்கு விளக்கமளித்தார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் யாழ் மாவட்டத்தின் மீள்குடியேற்ற மற்றும் வாழ்வாதார நடவடிக்கைகள் தொடர்பிலும் சுவிஸ் நாட்டின் தூதுவர் இதன்போது கேட்டறிந்து கொண்டார்.
Related posts:
கிரிக்கெட் வீரர் குசால் மெண்டிஸின் வீட்டில் கொள்ளை!
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராய்வு -இடைக்கால அரசாங்கத்தை உருவாக்...
ஆங்கில மொழிப் பிரச்சினைக்கு நாடாளுமன்றத்தின் மூலமே தீர்வு - நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவிப்ப...
|
|
|


