தமிழ் பெயர் பலகைகள் நீக்கப்பட்டால் கடுமையான தண்டனை – பொலிஸார் எச்சரிக்கை!

Tuesday, November 26th, 2019


நாடு முழுவதும் உள்ள தமிழ் பெயர் பலகைகளுக்கு சேதம் ஏற்படுத்துபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிக்கு மேலதிகமாக தமிழ் மொழியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர் பலகைகளை நீக்கியமை தொடர்பில் பாணந்துறை தெற்கு பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை பாதுகாப்பதற்கு தடை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதனை தடுப்பற்காக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொலிஸ் தலைமையகத்தினால் சிரேஷ்ட பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதற்கமைய நாடு சேவை, மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் ரோந்து நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு ஏற்பட கூடிய சம்பவத்தை தடுக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதே முறையில் முறைப்பாடு ஒன்று குறித்த பொலிஸ் நிலையங்களுக்ளுக்கு கிடை்தவுடன் உதவி பொலிஸ் அத்தியட்சகரினால் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவ்வாறான சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Related posts: