காணாமற்போனோர் தொடர்பான செயலகம் அடுத்த வருடம் ஜனவரியில் இயங்கும்!
Thursday, November 17th, 2016
காணாமற்போனோர் தொடர்பான செயலகம் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் செயற்படத் தொடங்கும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
காணாமற்போனோர் தொடர்பான செயலகத்தை அமைப்பதற்கான வர்தமானி அறிவிப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டதும், இந்தச் செயலகம் இயங்கத் தொடங்கும். இந்தச் செயலகத்துக்கான ஏழு உறுப்பினர்களை அரசியலமைப்புப் பேரவை நியமிக்கும். அதேவேளை, உண்மை கண்டறியும் பொறிமுறை தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை ஆலோசனைச் செயலணி, ஜனாதிபதியிடம் முன்வைக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
பெண் பொலிஸாருக்கு விண்ணப்பம் கோரல்!
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு!
நீதிச் சேவை ஆணைக்குழுவினால் இடமாற்றங்கள் அறிவிப்பு!
|
|