சுன்னாகம் பொதுநூலகத்திற்குத் தேசிய விருது !
Saturday, October 8th, 2016
இலங்கை தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் அமைப்பினால் கடந்த-2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதத்தில் நூலகங்களால் மேற்கொள்ளப்பட்ட தேசிய நிலை செயற்திறன் செயற்பாட்டுப் போட்டியில் வலி. தெற்குப் பிரதேச சபைக்குட்பட்ட சுன்னாகம் பொதுநூலகத்திற்குத் தேசிய விருது கிடைத்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை வவுனியா நகர சபையின் கலாசார மண்டபத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தலைமையில் இடம்பெற்ற விருது வழங்கும் வைபவத்தில் இதற்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் தேசிய ரீதியில் பொதுநூலகங்களிடையே நடாத்தப்பட்ட தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், முன்பள்ளிகள், சனசமூக நிலையங்கள், பொதுவாசகர்கள் மத்தியில் சிறப்பான சேவைகளை வழங்கியமைக்காகவும், வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு செயற்திட்டங்களைப் பாராட்டியும் இவ் விருது வழங்கப்பட்டுள்ளது.

Related posts:
|
|
|


