சர்ச்சைக்குரிய சயிடம் தொடர்பில் விஷேட கலந்துரையாடல்!

Friday, March 17th, 2017

சர்ச்சைக்குரிய சயிடம் நிறுவனம் தொடர்பில் விஷேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இதில், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக பேராசிரியர்கள், பீடாதிபதிகள், உயர் கல்வி அமைச்சர், வைத்திய சபை அதிகாரிகள், சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சயிடம் நிறுவனத்தின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.  இந்த சந்திப்பில் சயிடம் நிறுவனம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts:


பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரசாங்க ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் தடையின்றி வழங்கப்படுகின்...
கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு தம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய தாயார் - சீனா அறிவிப்பு!
க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடப்படும் - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ...